அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 26 July 2013

சரியாக படிக்காத, 8 வயது சிறுமியை அடித்துக் கொன்ற தந்தை கைது

சரியாக படிக்காத, 8 வயது சிறுமியை அடித்துக் கொன்ற தந்தை கைது
பெங்களூர், ஜூலை 27-

சரியாக படிக்கவில்லை என்பதற்காக 8 வயது சிறுமியை பெற்ற தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் பெங்களூர் வாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த சத்யநாராயண் சிங் என்பவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார்.

இதனையடுத்து, அவரது 8 வயது மகள் சிமோகாவில் உள்ள தாய்வழி தாத்தா - பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தாள்.

சமீபத்தில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட அவர் கடந்த மாதம் சிமோகவுக்கு சென்று மகளை தான் படிக்க வைத்து வளர்த்துக் கொள்வதாக கூறி அந்த சிறுமியை தன்னுடன் அழைத்து வந்தார்.
 
தான் ஆசைப்பட்டதை போல் சரியாக படிக்காததால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த இரும்பு ரோலரால் சிறுமியை துடிதுடிக்க அடித்துக் கொன்றார்.

அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வரதட்சணை கொடுமையால் முதல் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக போடப்பட்ட வழக்கில் இருந்து இவர் சமீபத்தில் தான் விடுவிக்கப்படடார் என்பது குறிப்பிடத் தக்கது.

maalaimalar thanks

No comments:

Post a Comment