பெங்களூர், ஜூலை 27-
சரியாக படிக்கவில்லை என்பதற்காக 8 வயது சிறுமியை பெற்ற தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் பெங்களூர் வாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த சத்யநாராயண் சிங் என்பவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார்.
இதனையடுத்து, அவரது 8 வயது மகள் சிமோகாவில் உள்ள தாய்வழி தாத்தா - பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தாள்.
சமீபத்தில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட அவர் கடந்த மாதம் சிமோகவுக்கு சென்று மகளை தான் படிக்க வைத்து வளர்த்துக் கொள்வதாக கூறி அந்த சிறுமியை தன்னுடன் அழைத்து வந்தார்.
தான் ஆசைப்பட்டதை போல் சரியாக படிக்காததால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த இரும்பு ரோலரால் சிறுமியை துடிதுடிக்க அடித்துக் கொன்றார்.
அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வரதட்சணை கொடுமையால் முதல் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக போடப்பட்ட வழக்கில் இருந்து இவர் சமீபத்தில் தான் விடுவிக்கப்படடார் என்பது குறிப்பிடத் தக்கது.
சரியாக படிக்கவில்லை என்பதற்காக 8 வயது சிறுமியை பெற்ற தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் பெங்களூர் வாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த சத்யநாராயண் சிங் என்பவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார்.
இதனையடுத்து, அவரது 8 வயது மகள் சிமோகாவில் உள்ள தாய்வழி தாத்தா - பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தாள்.
சமீபத்தில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட அவர் கடந்த மாதம் சிமோகவுக்கு சென்று மகளை தான் படிக்க வைத்து வளர்த்துக் கொள்வதாக கூறி அந்த சிறுமியை தன்னுடன் அழைத்து வந்தார்.
தான் ஆசைப்பட்டதை போல் சரியாக படிக்காததால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த இரும்பு ரோலரால் சிறுமியை துடிதுடிக்க அடித்துக் கொன்றார்.
அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வரதட்சணை கொடுமையால் முதல் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக போடப்பட்ட வழக்கில் இருந்து இவர் சமீபத்தில் தான் விடுவிக்கப்படடார் என்பது குறிப்பிடத் தக்கது.
maalaimalar thanks
No comments:
Post a Comment