கான்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் சதீஷ் சந்திரா(42). இவர் கான்பூர் தெஹத் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் ரெனியா என்ற இடத்தில் உள்ள ஒரு ஒட்டலில் பிணமாகக் கிடந்துள்ளார்.
மேலும் கொலைசெய்யப்பட்ட சதீஷ் சந்திராவின் ஆணுறுப்பு தனியாக துண்டித்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கொடூரக் கொலையினை கண்டித்து கான்பூர் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில் இந்தக் கொலையினை செய்தது ஒரு பெண் என தகவல் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் நடைபெற்று அன்று அந்தப் பெண் மருத்துவருடன் தென்பட்டுள்ளார். மேலும் 20 வயது மதிக்கத்தக்க அவர் சல்வார் கமிஷ் உடையில் இருந்துள்ளார்.
கொலை நடந்த பின்பு அந்தப் பெண் அங்குள்ள கூரியர் நிறுவனத்திற்குப் சென்று மருத்துவரின் மனைவி பெயருக்கு ஒரு பார்சல் அனுப்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவரின் மனைவி பார்சலைப் பிரித்துப் பார்த்த போது அதில் ஆணுறுப்பு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்பு பார்சல் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது பொலிசார் அந்த ஆணுறுப்பு மருத்துவருடையதா என்று பரிசோதிக்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான அந்தப் பெண்னை தேடி வருகின்றனர்.
newindianews thanks |
No comments:
Post a Comment