ராமநாதபுரம்
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தை அனைத்து வசதிகளுடன் விரிவுப டுத்த திட்டமிடப்பட்டுள் ளதாக நகரசபை கூட்டத் தில் தெரிவிக்கப்பட்டது.
நகரசபை கூட்டம்
ராமநாதபுரம் நகரசபை கூட்டம் அதன் தலைவர் (பொறுப்பு) கவிதா சசிக்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் (பொறுப்பு) மதிவாணன் முன்னிலை வகித் தார். இதில் சுகாதார அலுவ லர் சந்திரன் மற்றும் கவுன்சி லர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்களி டையே நடைபெற்ற விவாதம் வருமாறு:-
தலைவர்:- ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் நிலையத் தில் 9 இனங்களுக்கு குத்தகை விடப்பட்டது. குத்தகை எடுத் தவர்கள் 4 மாதமாக நகராட் சிக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை. ஒரு மாதத்திற்குள் அந்த தொகையை செலுத்த நோட் டீசு விடப்பட்டது. அதன் பேரில் 4 பேர் சுமார் ரூ.35 லட்சத்தை செலுத்தி விட்ட னர். பணம் செலுத்தாத மீதி 5 பேரின் குத்தகை உடனே ரத்து செய்யப்பட்டு மறு ஏலம் விடப்படும் வரை அந்த குத்த கையை நகராட்சியே நேரடி யாக நடத்தும்.
ராஜா உசேன்:- அனுமதியில் லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளை அகற்ற வேண்டும்.
ஜெயராமன்:- பாதாள சாக் கடை அடைப்புகளை உடனே சரி செய்ய வேண்டும்.
ரூ.1 கோடி
ஆணையாளர்:- பாதாள சாக்கடை பராமரிப்பு பணி களை குடிநீர் வடிகால் வாரி யத்தினர் செய்து வருகின்றனர். விரைவில் அடைப்புகள் சரி செய்யப்படும். அனுமதி இல் லாத விளம்பர போர்டுகள் அகற்றப்படும்.
வீரபாண்டியன்:- பஸ் நிலை யத்தை விரிவுபடுத்த வேண் டும். வாரச்சந்தையை உழவர் சந்தை அருகே உள்ள காலி இடத்துக்கு மாற்ற வேண்டும். நகரில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
ஆணையாளர்:- நகராட்சி யில் 64 கிலோ மீட்டர் நீள சாலைகள் உள்ளன. ஒரு கிலோமீட்டருக்கு 4 துப்பு ரவு பணியாளர்கள் தேவை. அதன்படி 224 பேர் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 110 பேர் தான் உள்ளனர். பணியாளர்களின் எண்ணிக் கையை உயர்த்துவதற்கும், குப்பைகள் அள்ள மேலும் 26 மூன்று சக்கர சைக்கிள் வாங்குவதற்கும், 19 டம்பர் பிளேசர்கள் புதிதாக வாங்க வும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இன்னும் ஒரு மாதத் துக்குள் துப்புரவு பணிகள் சரி செய்யப்படும்.
தலைவர்:- தற்போதைய புதிய பஸ் நிலையத்தில் 25 பஸ்கள் நிற்க வசதி உள்ளது. இதனை ‘ஏ’ கிளாஸ் பஸ் நிலை யமாக மாற்றவும், 51 பஸ் கள் நிற்க வசதி செய்யவும், 5 ஏக்கரில் விரிவுபடுத்தவும், ஏ.டி.எம். போன்ற நவீன வசதிகளை ஏற்படுத்தவும் ரூ.1 கோடி செலவிட முடிவு செய் யப் பட்டுள்ளது. அரசு அனு மதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். நகராட்சி குப்பை கிடங்கு அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்ப டும்.
அதிரடி சோதனை
நகரில் ஓட்டல் கழிவுகளை வாறுகாலிலும், சாலையோரங் களிலும் கொட்டுபவர்கள் மீது நடவடிககை எடுக்கப்படும். இதுதொடர்பாக அதிரடி சோதனை நடத்தப்படும். முழுமையாக மழை நீர் சேக ரிப்பு திட்டத்தை செயல்படுத் தவும், 100 சதவீ தம் வரி வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக் கப்படும். நவீன உடனடி கழிப்பறை அமைக்கும் திட் டத்தின் கீழ் ரூ.10 லட்சத் தில் அரசு ஆஸ்பத்திரி வளாகத் தில் முதல் கழிப்பறை அமைக் கப்படும். டுபிட்கோ நிதி உதவி யுடன் நகரில் உள்ள 26 ஊர ணிகளை ரூ.135 கோடி செல வில் தூர்வாரி சீரமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகி றது.
இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.
dailythanthi thanks
No comments:
Post a Comment