சென்னை, ஜூலை. 25–
பேஸ்புக் முகம் தெரியாத பலருக்கு முகவரியை கொடுக்கிறது. பலரது முகவரியையே அழிக்கும் சாதனமாகவும் சில நேரங்களில் மாறி விடுகிறது. அதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி.
நாகப்பட்டினம் அருகே உள்ள திருத்துறைபூண்டியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (வயது28). இவர் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருவான்மியூர் கோலவிழியம்மன் கோவில் 4–வது தெருவை சேர்ந்த அனு (வயது23). என்பவருக்கும் கடந்த மாதம் 12–ந்தேதி திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்ததும் உறவினர்கள் வீடுகளில் விருந்து, கோவில்களுக்கு செல்வது போன்றவற்றில் புதுமண தம்பதிகள் சந்தோஷமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது ஆடி மாதம் பிறந்து விட்டதால் அனுவை அவரது தாயார் ஸ்ரீதேவி திருவான்மியூருக்கு அழைத்து சென்றுவிட்டார்.
இந்த நிலையில் ரமேஷ் பாபு இணையதளத்தில் பார்த்தபோது பேஸ்புக்கில் தனது மனைவி அனு இன்னொரு வாலிபருடன் இருப்பது போன்ற போட்டோவை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுபற்றி மனைவியிடம் கேட்டார். அவர் கூறிய பதில் திருப்தி அளிக்கவில்லை.
இதையடுத்து ஆவடி சேக்காடுவில் உள்ள அனுவின் தாத்தா சரவண முத்து வீட்டில் வைத்து இரு குடும்பத்தினரும் அமர்ந்து நடந்தது என்ன? என்பது பற்றி அனுவிடம் கேட்டனர்.
அனு வேளச்சேரி மேடவாக்கத்தில் ஒரு ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றியுள்ளார். அவருடன் வேலை பார்த்த ரமேஷ் என்ற வாலிபர்தான் அனுவின் படத்தை அவரது படத்துடன் இணைத்து பேஸ்புக்கில் போட்டுள்ளார் என்ற விபரத்தை அனு தெரிவித்தார்.
ஆனால் அனு கூறிய பதில் கணவர் ரமேஷ் பாபுவுக்கு திருப்தி அளிக்கவில்லை. சந்தேகத்துடனேயே எழுந்து சென்றுள்ளார்.
இதனால் மனம் உடைந்த அனு வீட்டுக்குள் சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
maalaimalar thanks
No comments:
Post a Comment