First Published : 25 July 2013
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மலேசியா மண்டலப் பொறுப்பாளர் பீர்முகம்மது செவ்வாய்க்கிழமை ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிறரை புண்படுத்தும் வகையில் பேசியது தொடர்பாக போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் வசித்து வருபவர் மைதீன் மகன் பீர்முகம்மது (40). இவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மலேசியா மண்டலப் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளிவாசல் தாக்கப்பட்டது தொடர்பாக முஸ்லிம் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, தகாத வார்த்தைகளால் பேசினாராம்.
எனவே இவர் மீது கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
dinamani thanks
No comments:
Post a Comment