மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் சுபாஷ் காந்தி. இவர் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு ராஜீ என்ற மனைவியும் பவித்ரா என்ற மகளும், சாய் சரவணன் என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் காலையில் மகள் பவித்ராவை அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு ராஜீ அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார்.
அப்போது காலை நேரத்திலேயே சுபாஷ் காந்தி தனது வீட்டில் மதுப்பாட்டிலை வைத்து குடித்து கொண்டிருந்தார். அதை தட்டிக் கேட்ட மனைவியை அடித்து கொடுமை செய்தார். இதனால் தனது குழந்தை சாய் சரவணனை தூக்கிக்கொண்டு தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த ராஜீ மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதனால் அருகில் இருந்த 2 வயது மகன் தாயாரை கட்டிப்பிடித்ததால் இருவரும் தீயில் கருகினர்.இதனை பார்த்த சுபாஷ் காந்தி மனைவி மற்றும் குழந்தையை காப்பாற்ற முயன்ற போது அவரும் படுகாயமடைந்தார்.
இதனை தொடர்ந்து படுகாயமடைந்த 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜீயும், 2 வயது குழந்தையும் உயிரிழந்தனர். பொலிஸ்காரர் சுபாஷ்காந்தி சிகிச்சை பெற்று வருகிறார்.
newindianews thanks |
No comments:
Post a Comment