தமிழகத்தில் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதையே இந்த புள்ளிவிபரம் உணர்த்துகிறது.
2003-04ம் ஆண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடங்கப்பட்ட வருடம் முதல் நிதியாண்டில் அதன் வருமானம் 3 ஆயிரத்து 639 கோடியாக ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.
கடந்த 2003- 04 ஆம் ஆண்டு 156.61 லட்சம் பீர் பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை 2013- ஆம் ஆண்டில் 284 .29 லட்சம் பீர் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.
மதுபானங்களின் விற்பனை 156. 61 லட்சம் பெட்டிகளில் இருந்து தற்போது 536.35 லட்சம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.
2010ம் ஆண்டில் 12 ஆயிரத்து 498 கோடியாக இருந்த மது விற்பனை 2011ம் ஆண்டில் 14 ஆயிரத்து 965 கோடியாக உயர்ந்தது. அடுத்த இரண்டாண்டுகளில் அதாவது 2012-13 ஆம் ஆண்டில் மது விற்பனை ரூ. 21 ஆயிரத்து 680 கோடியை எட்டியுள்ளது என புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.
newindianews thanks |
No comments:
Post a Comment