By திருவாடானை,
First Published : 30 July 2013
தொண்டி அருகே உப்பூர் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்க 715 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து திருவாடானை வட்டாட்சியர் பேச்சிமுத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
உப்பூர் அருகே அனல் மின் நிலையம் அமைக்க திருவாடானை தாலுகா திருப்பாலைக்குடி, உப்பூர். வலமாவூர் ஆகிய பகுதிகளில் 715 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மின் வாரிய உயர் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.
சர்வே பணிகள் நடைபெற்று வருவாய் கோட்டாட்சியரின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடலோரம் என்பதால் மத்திய ஒழுங்கு முறை சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையினரிடம் அனுமதி பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
news dinamani thanks
No comments:
Post a Comment