By ராமநாதபுரம்
First Published : 30 July 2013
அரசு பஸ்கள் மீது கல்வீசி சேதப்படுத்துதல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்படும் என ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜூலை 22 ஆம் தேதி ஒரு கட்சியினர் பந்த் அறிவித்திருந்தனர். அப்போது பரமக்குடியில் இருந்து நயினார் கோவில் வழியாக ராமநாதபுரம் வரும் 26 ஆம் எண் அரசு நகர் பஸ்ûஸ அரண்மனை பகுதியிலும், அதே வழியாகச் செல்லும் மற்றொரு
தனியார் பஸ்ûஸ தொருவளூர் பகுதியிலும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கல்வீசி கண்ணாடிகளை சேதப்படுத்திவிட்டு தலைமறைவாகினர்.
இது தொடர்பாக அரசு பஸ் ஓட்டுநர் கோவிந்தராஜ் (42), தனியார் பஸ் ஓட்டுநர் கண்ணன் (26) ஆகியோர் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.
இதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, ராமநாதபுரம் வெற்றிலைக்காரத் தெருவைச் சேர்ந்த கனகநாதன் (19), இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்த மணிமாறன் (25) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளோம். இவர்கள் மீது பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதால் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் பஸ்கள் மீது கல்வீசுதல், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்தார்.
dinamani thanks
No comments:
Post a Comment