30 July 2013
மதுரை நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட விசாரணை கைதி திடீரென நிர்வாண கோலத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை திடீர் நகரைச் சேர்ந்த வீரபத்திரன் என்ற சிவா (40). இவரை வழிப்பறி வழக்கில் கைது செய்த எஸ்.எஸ்.காலனி போலீஸார் திங்கள்கிழமை மாலை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.
4 வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நீதிமன்ற வாசலில் காத்திருந்த போது அவர் மீது கத்தியை காட்டி வழிப்பறி செய்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் முதலில் கஞ்சா வழக்கில் கைது செய்திருப்பதாகவும் அபராதம் கட்டிவிட்டு வந்துவிடலாம் என்று கூறியிருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் திடீரென அந்த நபர் தனது லுங்கியை அவிழ்த்து எறி்ந்து நிர்வாண கோலத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தன் மீதான வழக்கை மாற்றாவிட்டால் தற்கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியபடி நின்றார். அவரை போலீஸார் சமதானம் செய்து ஆடையை உடுத்தச்செய்து அழைத்துச்சென்றனர்
dinamani thanks
No comments:
Post a Comment