உத்திரபிரதேசத்தின் மொரடாபாத்தில் உள்ள திலாரி என்னும் பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்று செயல்படுகிறது.
இப்பள்ளியில் வழக்கம் போல் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அப்போது சிறுமி ஒருவர் வாங்கிய உணவில், தவளை ஒன்று இறந்து கிடந்தது.
இதனை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன சிறுமி, இத்தகவலை தனது பெற்றோர் மற்றும் ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவர்கள் பொலிசில் புகார் தெரிவிக்கவே, விரைந்து வந்த அதிகாரிகள் தவளை இறந்து கிடந்ததை உறுதி செய்தனர்.
இதனையடுத்து குறித்த பள்ளியின் சத்துணவு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
newindianews |
No comments:
Post a Comment