TUESDAY, 30 SEPTEMBER 2014 20:43
பெட்ரோல் விலையை பாஜக பதவியேற்று நான்காவது முறையாக குறைத்துள்ள எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலைக் குறைப்பை மீண்டும் ஒத்திவைத்துள்ளன.
சர்வதேச சநதையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாகக் குறைந்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவைக் காணவில்லை. எனவே, எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை சந்தித்து வந்த இழப்பையும் மீறி, தற்போது பெரும் லாபத்தை ஈட்ட ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை தாராளமாக குறைக்கலாம் என்றாலும், ஏனோ டீசல் விலையை மட்டும் இதுவரை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை.
இந்நிலையில் இன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 65 பைசாக் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலைக் குறைப்பு என்பது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஜூலை மாதத்தில் ஒருமுறையும், ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு முறையும், இப்போது ஒரு முறையும் என்று பெட்ரோல் விலையைக் குறைத்துள்ள எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலைக் குறைப்பை மட்டும் ஒத்திவைத்துள்ளன. என்றாலும், டீசல் விலையில் இப்போது எந்தவித மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.
4tamilmedia thanks
No comments:
Post a Comment