அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 September 2014

இதய நோயிலிருந்து இருதயநோயிலிருந்து பாதுகாக்க வழிகள்



இதய நோயிலிருந்து
இருதயநோயிலிருந்து பாதுகாக்க வழிகள்: இருதய நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்., 29ம் தேதி, உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 உடற்பயிற்சி இல்லாதது, நைட் ஷிப்ட்கள், முறையற்ற உணவு பழக்க வழக்கம், அதிக நேர பணி, இதனால் குடும்பத்தில் ஏற்படும் நிம்மதியின்மை போன்றவை இருதய நோய் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கிறது. இன்றைய சூழலில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உலகில் அதிகளவிலான மரணத்துக்கு இதயநோய் காரணமாக விளங்குகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 40 லட்சம் பேர் இருதய நோய்களால் மரணமடைகின்றனர்.
இருதய நோய்களால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 3 சதவீதத்தில்இருந்து 12 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது எதிர்காலத்தில் 20 சதவீதமாக கூட உயரலாம் என டாக்டர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அதே போல் உலகில் மாரடைப்பால் மரணமடைபவர்களில் 20 சதவீதம் பேர் புகைபிடிப்பவர்கள். 
புகை பிடிக்காதவர்களை விட புகைபிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதனால் இருதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. புகை பிடிப்பவர்களுக்கு மட்டும் இதனால் பாதிப்பு என்றில்லை. அவர்களை சுற்றியுள்ளோரும் குறிப்பாக குழந்தைகள் இதனால் பாதிக்க படுகின்றனர். நியுயார்க்கில் புகை பிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் குறைந்திருக்கிறது.
இந்தியாவிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் தேவை என டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். இல்லையெனில் 2020ல் உலகிலேயே அதிக இருதய நோயாளிகளை கொண்ட நாடு இந்தியாவாக இருக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.உடல் பருமனாதலாலும், சர்க்கரை நோய் காரணமாகவும் இருதய நோய்கள் ஏற்படலாம் என கண்டறியப் பட்டுள்ளது.

சர்க்கரை நோயால் இருதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் சேதமடைவதால் மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இந்த குறைபாடு இருக்கிறது. இதனால் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
எனினும் சர்க்கரை நோயாளிகளுக்கு இருதய நோயை எளிதில் கண்டறிய முடிவதில்லை.


இதய நோயை  தவிர்க்க :

*புகைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்த்தால், இருதய நோய்கள் வருவதிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.

*உப்பு அதிகளவில் பயன்படுத்துவதால் உடலில் ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

*ரத்தத்தில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, பிபி போன்றவற்றின் அளவை சீரான அளவில் வைத்திருக்க வேண்டும்.

*ஒரு நாளுக்கு சராசரியாக 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்.
*காய்கறிகள் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், ஆலிவ் எண்ணெய், மக்காச்சோளம், சூரிய காந்தி எண்ணெய் வகைகள் இருதயத்துக்கு பாதுகாப்பளிக்கின்றன.

*சிரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது, இதய நோயிலிருந்து விடுபடுவதற்கு சிறந்த மருந்து.


suransukumaran thanks

No comments:

Post a Comment