- Thursday, 27 November 2014 17:21
சட்டப்பேரவைக்கு வந்து ஜனநாயகக் கடமையாற்றத் தயாராகவே இருக்கிறேன் என்று,திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது சட்டப்பேரவைக்கு தினமும் வந்து கருணாநிதி ஜனநாயகக் கடமையாற்றத் தயாரா என்று, தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கருணாநிதிக்கு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள கருணாநிதி, தாம் தினமும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு வரத் தயார் என்றும், தமக்கு வசதியான இருக்கை இல்லை என்பதற்காவே சட்டப்பேரவைக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையின் கண்ணியத்தைக் குறைத்தது அதிமுகதானேத் தவிர, திமுக இல்லை என்றும், 1989ம் ஆண்டு ஜெயலலிதாதான் சட்டப்பேரவையில் சொல்லிவைத்து ஒரு நாடகத்தை அரங்கேற்றினார் என்றும், இதை சில வருடங்கள் கழித்து அவரது கட்சியிலிருந்து விலகிய திருநாவுக்கரசரே கூறியுள்ளார் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
காற்றடித்துக் கோபுரத்தில் அமர்ந்தது போல, தற்போதைய நிலையில் இருக்கும் ஒ.பன்னீர் செல்வம் ஒரு முதல்வருக்கு உரிய கண்ணியத்துடன், நடந்துக்கொள்ள வேண்டும், இறுமாப்புடன் நடந்து கொள்வது என்பது ஒரு முதல்வருக்கு அழகல்ல என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
4tamilmedia. thanks
No comments:
Post a Comment