[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 07:24.54 மு.ப GMT ]
பிரான்ஸ் நாட்டில் தம்பதியினர் ஒருவர் தங்களது மகள்களை கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரான்சின் மியக்ஸ் (Meaux) நகரை சேர்ந்த தம்பதியினர் ஒருவர் தங்களது இரண்டு மகள்களுக்கு கொடுமையான தண்டனைகள் கொடுத்து வந்துள்ளனர்.
இவர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தங்கள் மகன்களை அடித்தும், மண்டியிட வைப்பதும், வெந்நீர் மற்றும் குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வைத்தும் துன்புறுத்தியுள்ளனர்.
மேலும் தங்களது இளைய மகனின் கழிவுகளை இந்த இரண்டு சிறுமிகளும் சாப்பிட வேண்டும் என கட்டாயப்படுத்தி மிகவும் கேவலமான முறையிலும் நடந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட தம்பதியினருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியக்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது கொடுமைப்படுத்தப்பட்ட இரு மகள்கள் உட்பட, இவர்களது 6 குழந்தைகளும் சமூக நலன் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment