அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 9 December 2014

டெல்லி பலாத்காரம்: எனது மகனுக்கு தண்டனை கொடுங்கள்: தாயின் வேண்டுகோள்


[ செவ்வாய்க்கிழமை, 09 டிசெம்பர் 2014, 08:13.05 AM GMT +05:30 ]
எனது மகன் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர் என்று டெல்லியில் பலாத்கார வழக்கில் கைதான உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவின் தாய் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 25 வயது பெண்ணை தாக்கி, பலாத்காரம் செய்த வழக்கில் உபேர் டாக்சி ஓட்டுநர் ஷிவ் குமார் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பொலிஸ் விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் யாதவின் செயலை அறிந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மெய்ன்புரியில் வாழும் அவரது பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து யாதவின் தாய் கங்கா ஸ்ரீ கூறுகையில், என் மகன் தவறு செய்துள்ளார். அவர் அதற்காக நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
தந்தை ராம்நாத் யாதவ் கூறுகையில், முன்பும் என் மகன் மீது சில வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் எந்த வழக்கிலும் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
பொலிஸ், விசாரணையில் யாதவ் கடந்த 2011ம் ஆண்டு தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ராலி பகுதியில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி 7 மாதங்கள் சிறையில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
பின்னர் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றங்கள் செய்துள்ள யாதவுக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்று டெல்லி பொலிசார் கடந்த ஆகஸ்ட் மாதம் நன்னடத்தை சான்றிதழ் அளித்ததாக செய்திகள் வெளியாகின.
ஆனால் அந்த சான்றிதழ் பொய் என்றும், தாங்கள் யாதவுக்கு எந்த சான்றிதழும் வழங்கவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் உபேர் டாக்சிகள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது.





newindianews thanks


No comments:

Post a Comment