அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 2 May 2015

பசுபிக் கடலில் புதிதாக உருவான தீவு தோன்றிய வேகத்திலேயே மறைகிறது!

பசுபிக் கடலில் புதிதாக உருவான தீவு தோன்றிய வேகத்திலேயே மறைகிறது!

டொங்கோவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பசுபிக் சமுத்திரத்தில் உலகில் புதியதொரு தீவு உருவாகியிருந்தது.

இன்னமும் பெயர் கூட இடப்படாத இந்த தீவு, டொங்கோ பிரதான தீவிலிருந்து 65 கி.மீ தூரத்தில் உருவாகியிருந்தது. கடந்த ஜனவரி மாதம் முதல் சாம்பல் கக்கத் தொடங்கியிருந்த டொங்கோ எரிமலை வெடிப்பினால் கடல் நீர் மட்டம் குறைவடைந்து இத்தீவு உருவாகியிருந்தது. அந்தப்பக்கமாக சென்ற சுற்றுலா விடுதிக் குடும்பம் ஒன்று,  புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிந்ததிலிருந்து இத்தீவு பிரபலமடையத் தொடங்கியிருந்தது.

எனினும் இத்தீவு உருவான வேகத்திலேயே மறைந்து போகும் என புவியியாளர்கள் தெரிவித்த கருத்து உண்மையாகத் தொடங்கியுள்ளது. இத்தீவு மறைந்து போகத் தொடங்கியுள்ளதுடன் சட்ட விரோதமான மணற் கொள்ளை, சூறாவளி மற்றும், புவி வெப்பயமாதலால் கடல் நீர் மட்டம் அதிகரிப்பு ஆகிய காரணங்களே இத்தீவின் அதி வேக மறைவுக்கும் செல்வாக்கு செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

news 4tamilmedia thanks

No comments:

Post a Comment