அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 6 October 2015

நள்ளிரவில் ஓடும் வேனில் இளம்பெண் பலாத்காரம்: பெங்களூரில் கொடூரம்

[ செவ்வாய்க்கிழமை, 06 ஒக்ரோபர் 2015, 07:17.57 AM GMT +05:30 ]
பெங்களூரில் கால்சென்டரில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர், இரவில் ஓடும் வேனில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த 23 வயது பெண், பெங்களூர்-ஒசூர் சாலையிலுள்ள ஒரு பி.பி.ஓவில் பணியாற்றி வருகிறார்.

தனது சகோதரியுடன், எச்.எஸ்.ஆர் லே-அவுட் என்ற பகுதியிலுள்ள விடுதியில் அவர் தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, வேலைக்கு செல்ல ஆட்டோவிற்காக காத்திருந்துள்ளார்.
அப்போது அந்த வழியே சென்ற டெம்போ டிராவலர் வேன் ஒன்றில் கிளீனரும் மட்டும் இருந்துள்ளனர்.
கிளீனர் நீங்கள் எங்கே போக வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்த பெண், எச்.எஸ்.ஆர் லே-அவுட் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
அங்குதான் வேனும் செல்கிறது என்று கிளீனர் அழைத்துள்ளார். அப்பெண் அந்த வேனில் ஏறியபோது, உடன் நின்ற தோழி, தனியார் வேனை நம்பி செல்ல வேண்டாம் என்று தடுத்துள்ளார்.
ஆனால் இரவு நேரம் என்பதால், வேறு வாகனம் வராததால் அந்த வேனில் ஏறிவிட்டார்.
சில்க்போர்டு மேம்பாலம் வரை சரியான பாதையில் சென்ற அந்த வேன், திடீரென மடிவாளா நோக்கி பயணிக்க தொடங்கியது.
இதனால் அச்சமடைந்த அந்த பெண், ஏன் வண்டி எதிர்திசையில் செல்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அப்போது அந்த கிளீனர், கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
கோரமங்களா வழியாக, இந்திராநகர் நோக்கி அவுட்டர் ரிங்ரோடு வழியாக பயணித்த வேனில், முதலில் கிளீனரும், பிறகு ஓட்டுனரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.
அந்த, பெண்ணிடமிருந்து சிம்கார்டை பறித்ததோடு, பலாத்கார தகவலை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
பின்னர் இரவு ஒரு மணியளவில் மடிவாளாவிலுள்ள பிரபல ஐயப்பன் தேவஸ்தானா அருகே அந்த பெண்ணை கீழே இறக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதையடுத்து சகோதரியை பொது தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பெண் ஊழியர் நடந்த தகவலை கூறியுள்ளார்.
அந்த பெண் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு திங்கள்கிழமை காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது பொலிசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


newindianews thanks

No comments:

Post a Comment