அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 13 March 2023



Mohammed Samsudeen 

கசப்பாயினும் உண்மை பேசு- நபி ஸல்
குலில் ஹக்க வலவ் கான முர்ரா -நபிமொழி

.சுன்னத் ஜமாத் எனக்கூறும் நம்மில் பெரும்பாலோர் ஜகாத் போன்ற கடமையான விசயத்திலும் குர்ஆன் கூறும் ஜமாத்தாக செய்வதில்லை.
நபி ஸல் வழிகாட்டிய கூட்டு ஜகாத் ( பைத்துல்மால்) மூலமும் செய்வதில்லை.
பெரும்பாலும் 
சுன்னத்தும் இல்லை.
ஜமாஅத்தும் இல்லை.
மக்களுக்கு செல்ல வேண்டிய அல்லாவின் செல்வத்தை (ஜகாத் என்பது மாலுல்லா- நபிமொழி) 
அநியாயமாக புசிப்பாதாக குர்ஆன் (9:34, 35) எச்சரித்ததை , தலைவர்கள் மற்றும் வழிகாட்டவேண்டியவர்களே சுயநலம் காரணமாக எடுத்துச் சொல்லவில்லை.
தனியாக ஜகாத் கொடுங்கள் என்று கூறுவதால் இவர்களுக்கு கிடைப்பதோ வெறும்( நோன்பு கஞ்சி & ரமலான் கவர்) 5% தான்.
இதனால் 95% ஜகாத் வீணாகி சமுதாயத்தை தொடர்ந்து இல்லாமையிலும் கல்லாமையிலும் வைத்திருக்கிறது.
ரமலான் மாதம் தொப்பி, புர்கா அணிந்து பலர் வசூல் செய்ய இது வழிவகுக்குகிறது. 
ஜகாத் ரமலானில் மட்டும் உள்ள அமல் அல்ல. நபி ஸல் 365 நாள், நாள்தோறும் 23 மணிநேரம் செய்த நற்பணி.
பசி ஒருமாதம் மட்டுமல்ல . எனவே குர்ஆன் விவசாயியின் அறுவடை  ( நிச்சயிக்கப்பட்ட சம்பளம்)அன்றே ஜகாத் செலுத்துவதை கடமையாக்கியுள்ளது.
ஆத்தூ ஹக்கஹு யவ்ம fபி ஹசாதிஹி- குர்ஆன்.

குர்ஆன், நபிவழி கூட்டு ஜகாத் & சதக்கா வேறுபாடு  சுயநலத்தால் நமக்கு ஜமாத்கள் சொல்லித்தர வில்லை
(இஸ்லாத்தை தவறாக சொன்வர்களுக்கும் கேள்வி உண்டு)

 பொருளாதார பின்னடைவால் அரசியல் ( சாதரண MC தேர்தல்வரை),& 
சமூக இலக்கை இன்று வரை சமுதாயம் அடையமுடியவில்லை.
குறைந்த அளவான பித்ரா காசை வசூலித்து பெதுமக்களுக்கு வழங்கும் சுன்னத் ஜமாத் அல்லாத அமைப்புகள் அடைந்த சிறு வெற்றி கூட பெற முடியாது, ஊர் சண்டையிலும், வரதட்சணை திருமணம் போன்ற தவறான வழிகாட்டுதலிலும்,வக்பு வாரிய பிடியிலும் சுன்னத் ஜமாத் சிக்கி தவிக்கிறது.
நபி வழி திருமணம், மற்ற அமல்களில், கடன், ஷரியத் பொருளாதாரம், கல்வி மூடநம்பிக்கை எதிப்பு போன்றவற்றில் சுன்னத் ஜமாத் தவறான வழிகாட்டுதலில் பின்னடைவில் உள்ளது.

“எந்த சமுதாயம்  அல்லா, ரசூல் காட்டிய வழி இருந்தும்,
கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற முயலவில்லையோ அந்த சமூகம் அரசியல், சமூக முன்னேற்றம் அடைய முடியாது” 

அது சுன்னத் ஜமாஅத், கட்சி, அமைப்புகளாக இருந்தாலும்.

இதற்காக நம்மில் சமுதாய வளர்ச்சி காண விரும்பும் ஒவ்வொருவரும், அகீதா வேறுபாடு ஒதுக்கி,
கல்வி உதவி, பொருளாதார மூலமான சமூக,அரசியல் மாற்ற பயணத்தில் முல்வோம். ஒன்றிணைவோம்
8778560804

No comments:

Post a Comment