கோலாலம்பூர்,
ஜனவரி 30- 2013-ஆம் ஆண்டிற்கான உலக பத்திரிக்கை சுதந்திரம் கொண்ட நாடுகளின்
பட்டியலில் மலேசியா 145 இடத்தை வகிக்கின்றது.
“Reporters
Without Borders” எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
2010-ஆம்
ஆண்டில் 141-வது இடத்தையும், 2011/2012-ஆம் ஆண்டில் 122-2222122-வது
இடத்தையும் வகிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தகவலைப் அணுகுவதில் கட்டுப்பாட்டில்
இருப்பதே இந்த சரிவிற்கு காரணமாக கருதப்படுகிறது. (access to information “becoming
more and more limited”)
மேலும்
சில விஷயங்களில் குறித்த தகவல்களை அரசாங்கம் தணிக்கை செய்வதும் மற்றொரு காரணமாகும்.
குறிப்பாக கடந்த வருடம் நடத்தப்பட்ட “Bersih” பேரணிகளின் போது,
பத்திரிக்கையாளர்களின் கேமிராக்களும், அவற்றின் ‘மெமோரி” கார்ட்டுகளும் பறிமுதல்
செய்யப்பட்டது போன்றவை பத்திரிக்கை சுதந்திரம் மறுக்கப்பட்டதையே குறிக்கின்றன என
இந்நிறுவனம் குறிப்பிட்டது.
அண்டை
நாடுகளான தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா வரிசையே 135-வது இடத்தையும் 139-வது
இடத்தையும் பிடித்திருந்தன.
vanakkammalaysia thanks
No comments:
Post a Comment