அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 30 January 2013

பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிகோலும் மாற்றங்களை ஏற்படுத்துவோம்!



பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிகோலும் மாற்றங்களை ஏற்படுத்துவோம்!
கோலாலம்பூர், ஜனவரி 30- பெண் என்பவர் தாயார், மனைவி, பணியாளர் என பல்வேறு பொறுப்புகளை வகிக்கிறார். நாட்டின் கண்களாக விளங்கும் அவர்களை நாம் மதிப்பது அவசியமாகும். பெண்களின் பொறுப்புகளை எளிதாக்குவது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

அதற்கு பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக விளங்கும், நாட்டின் சட்ட திட்டங்கள், விதிமுறை, நடைமுறை வழக்கங்கள் மற்றும் சிந்தனை போக்கு ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுவது அவசியமான ஒன்றாகும்.
இவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகோலும் பல மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக தேசிய மகளிர் மன்றத்தின் பொன் விழாவை தொடக்கி வைத்தப் பின்னர் தமது உரையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.
மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சருமான டத்தோ ஸ்ரீ நஜிப்,  இவ்விவகாரத்தை உடனடியாக செயலாற்றும் வண்ணம், தேசிய மகளிர் மன்றத்தை பரிந்துரை மற்றும் ஆய்வறிக்கை ஒன்றை தயார்படுத்துமாறு கூறினார்.
பெண்களின் நிலை மற்றும் போட்டியாற்றலை மேம்படுத்துவதற்கு முன்பாக அவர்களின் திறனை நிர்ணயிப்பது அவசியம் என்றார் பிரதமர்.
தற்போது நாட்டில் 46 விழுக்காடு பெண்கள் மட்டுமே வேலை செய்கின்றனர், அதுவும் மாத வருமானம் 3000 ரிங்கிட்டுக்கும் குறைவான ஊதியத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. 

 /vanakkammalaysia thanks

No comments:

Post a Comment