அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 25 January 2013

ரயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் : தமிழக தெற்கு ரயில்வே அதிரடி




ரயில் நிலையங்களில் அசுத்தம் செய்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப் படும் என்று தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுத் தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கையில், தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பிளாட்பாரங்கள், மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது.

இதன் காரணமாக ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவது, குளிப்பது, துணி துவைப்பது, சிறுநீர் கழித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, ரயில்வே சட்டப் பிரிவுப் படி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ரயில்களில் போஸ்டர் ஒட்டுதல், மற்றும் ரயில்களை சேதப் படுத்துவது போன்ற செயல்களை செய்வதும் இந்த சட்டப் பிரிவிகீழ் குற்றமாக கருதப்படும், அவர்களுக்கும் மேற்கண்ட சட்டம் பொருந்தும். எனவே ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க பயணிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டு உள்ளது.

4tamilmedia. thanks

No comments:

Post a Comment