January 29,
2013 09:02 am
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் பிகானர் நகரில், குடும்பத் தகராறு காரணமாக, குழந்தையைக் கடித்துக் குதறிய
தந்தை, குழந்தை
பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு
குழந்தைகளுக்கு தந்தையான குறித்த நபர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தன்
மனைவியிடம் தகராறு செய்வாராம். கடந்த 26-ம்
திகதி போதையில் வந்த அவர் வழக்கம்போல் மனைவியுடன் சண்டைபோட்டுள்ளார்.
அப்போது
குழந்தைகள் பயத்தில் அழத் தொடங்கின. போதை வெறியில் இருந்த தந்தை குழந்தைகள் என்றும்
பாராமல் அடித்துள்ளார். மூத்த குழந்தையை கடுமையாக அடித்த அவர், 5 மாத
கைக்குழந்தையின் மூக்கு,
உதடு மற்றும் கன்னத்தை கடித்துள்ளார்.
இதனால்
பலத்த காயம் அடைந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து
வருகின்றனர்.
மேலும்
அந்த குழந்தை உயிர்பிழைக்க வேண்டுமானால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டிய சூழ்நிலை
உள்ளது. எனவே, மேலதிக
சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் அல்லது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல
மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
thamilan thanks
No comments:
Post a Comment