அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 28 January 2013

டெல்லியில் மாணவி வழக்கு - 6வது குற்றவாளி மைனர்தான்


டெல்லியில் மாணவி வழக்கு - 6வது குற்றவாளி மைனர்தான்

January 29, 2013  12:11 pm

டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்கார, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6வது குற்றவாளி மைனர்தான் என்று சிறார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். காயம் அடைந்த மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் உயிரிழந்தார்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவன் மைனர் என்பதால் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

அவன் மீது சிறார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவன் வயது என்ன என்பதை நிர்ணயிக்க எலும்பு பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி பொலிஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவை விசாரித்த சிறார் நீதிமன்ற நீதிபதி நேற்று கூறியதாவது...

கைது செய்யப்பட்டவன் பிறந்த திகதி 1995, ஜூன் 4 என்பது அவன் படித்த பள்ளிகளின் ஆவணங்களை பரிசீலித்ததில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குற்றம் நடந்தபோது அவனுக்கு 18 வயது ஆகவில்லை. எனவே, அவன் மைனர் சிறுவன்தான். அவன் மீதான வழக்கு விசாரணை சிறார் நீதிமன்றத்தில்தான் நடக்கும். அவனது வயதை கண்டுபிடிக்க எலும்பு சோதனை நடத்த அனுமதிக்க முடியாது.
இவ்வாறு நீதிபதி கூறினார்.

சிறார் நீதி சட்டப்படி, அவனுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு தண்டனை மட்டுமே வழங்க முடியும். சீர்திருத்த பள்ளியில் 18 வயதுக்கு மேற்பட்டவர் களை அடைத்து வைக்க முடியாது. இதனால், கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டபோதும் வரும் ஜூன் மாதம் அவன் விடுதலை ஆகிவிடுவான்.



thamilan thanks

No comments:

Post a Comment