சீனாவில் ஆறு வயதிலேயே
தன்னுடன் படிக்கும் மாணவர்களை மிரட்டி வந்த மகனை, தந்தையே அடித்து கொன்ற சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் லோங்காங் மாவட்டத்தை சேர்ந்தவர் செங் ஜங்பெங். இவரது மகன் ஜியாஹோ சிறு
வயது முதலே கொடூர குணம் நிறைந்தவனாக இருந்துள்ளான்.
இதனால் பள்ளிக்கு சென்றால் திருந்திவிடுவான் என எதிர்பார்த்த தந்தை, பள்ளியில்
சேர்த்துள்ளார்.
ஆனால் பள்ளியில் அவனது கொடூர குணம் மேலும் மேலும் வளரத் தொடங்கியது, ஆறு
வயதிலேயே தன்னுடன் படிக்கும் சிறுவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான்.
இதனையடுத்து பலமுறை கண்டிப்புடன் பேசியும், தண்டித்தும் திருந்தியபாடில்லை.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி தந்தை அழைத்த ஆசிரியை, வகுப்பில்
படிக்கும் சக மாணவர்களை, அடித்து உதைத்து மிரட்டி ஜியாஹோ பணம் பறிப்பதாகவும், அந்த
மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர்
கூறினார்.
இதனையடுத்து உங்கள் மகனை பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டில் வைத்து அவனை
திருத்துங்கள் என செங் ஜங்பெங்-கிற்கு ஆசிரியர் அறிவுரையும் தந்துவிட்டுச்
சென்றார்.
அன்றிரவு மனைவி வேலைக்குச் சென்றிருந்த போது, தனிமையில் அமர்ந்திருந்த தந்தை,
மகனை எப்படி திருத்துவது? என தீவிரமாக ஆலோசித்தார்.
சுவற்றில் மாட்டியிருந்த சவுக்கை எடுத்து, கை ஓயும் வரை சுமார் 1/2 மணி நேரம்
விளாசிய அவர், இரவு 11 மணியளவில் மகனை படுக்க வைத்தார்.
இரவு 2 மணியளவில் திருந்தாத மகனை பாசத்தோடு பார்க்கச் சென்ற தந்தை
திடுக்கிட்டார். காயங்களில் இருந்து வழிந்த ரத்தம், உடைகளை நனைத்த நிலையில் உடல்
சில்லிட்ட நிலையில் இருந்த மகனை மருத்துவமனையில் அனுமதித்தார்.
தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும், சிறுவன் ஜியாஹோ சிகிக்சை பலனின்றி சில மணி
நேரங்களில் உயிரிழந்தான். ஜென் சுங்பெங்-கை கைது செய்த லோங்காங் மாவட்ட பொலிசார்,
அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் கூறுகையில், என் மகனை நானே அடித்து கொன்றுவிட்டேன், இனி நான் என்ன
சொன்னாலும், அது அர்த்தமற்ற வார்த்தையாக தான் தோன்றும் என கண்ணீர் மல்க
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment