அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 25 January 2013

அமெரிக்கா வரை செல்லக்கூடிய ஏவுகணை ஏவுவோம்' :வட கொரியா மிரட்டல்!


on 24 January 2013.

மற்றுமோர் ஏவுகணை பரிசோதனை, மற்றும் அணு ஆயுதப் பரிசோதனை செய்யப் போவதாக அறிவித்துள்ள வடகொரியா, 'எமது புதிய பரிசோதனைக்காக ஏவப்படவுள்ள ஏவுகணை, அமெரிக்கா வரை செல்லும் வகையில் இருக்கும்!' என அறிவித்து, கதிகலங்க வைத்துள்ளது. வட கொரியா, சமீபத்தில் நீண்ட தொலைவு செல்லும்... 

ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதித்த காரணத்தால், இந்த அறிவிப்புக்கு வெயிட் அதிகமாகிறது. வட கொரிய அரசுக்கு சொந்தமான KCNA (Korean Central News Agency) செய்தி மையத்தில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், இது வட கொரிய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு என எடுத்துக்கொள்ளலாம்.


அதே அறிக்கையில், “எமது புதிய ஏவுகணை பரிசோதனை அமெரிக்காவை இலக்கு வைக்கும் அளவில் தயாரிக்கப்படுவதன் காரணம், அமெரிக்கா, கொரிய மக்களின் நிரூபிக்கப்பட்ட எதிரி” என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) வெளியான இந்த அறிக்கைக்கு அமெரிக்கா உடனடியாக பதில் கொடுத்துள்ளது.


அமெரிக்காவின், கொரி விவகாரங்களுக்கான ராஜதந்திரி க்ளென் டேவிஸ், “கொரியா பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்த இது தகுந்த நேரமல்ல. அதை வட கொரியா முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மற்றுமோர் ஏவுகணை பரிசோதனையை அவர்கள் நடத்தினால், அது அவர்களுக்கே மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய தவறாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

News: Source

eutamilar. thanks

No comments:

Post a Comment