அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 1 January 2013

கற்பழிப்புக்கு எதிரான புதிய சட்டத்திற்கு டெல்லி மாணவியின் பெயர் வைக்க சசிதரூர் கோரிக்கை.



Wednesday  02  January  2013 
Name new antirape law after dellhi gangrape victim, suggests Shashi Tharoor.கற்பழிக்கப்பட்ட டெல்லி மாணவியின் பெயரை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்ற மத்திய மந்திரி சசிதரூரின் கருத்தால், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.தன் மனதில் பட்டதை பகிரங்கமாக சொல்லி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர், மத்திய மந்திரி சசிதரூர்.


பகிரங்கமாக அறிவிக்க...

டெல்லியில் 23 வயது மாணவி கற்பழிக்கப்பட்டு பலியான சம்பவம் குறித்து, இணையதளத்தில் (டுவிட்டர்) அவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.அதில் கற்பழிக்கப்பட்ட மாணவியின் பெயர், விவரங்களை ரகசியமாக வைத்து இருப்பது பற்றி கேள்வி எழுப்பி இருக்கும் அவர், அந்த விவரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.

பெயர் சூட்டி கவுரவம்

‘‘கற்பழிப்புக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டம் வலுவானதாக திருத்தி அமைக்கப்பட இருக்கிறது. மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், திருத்தப்பட்ட புதிய சட்டத்திற்கு, அந்த மாணவியின் பெயரை சூட்டி கவுரவிக்க வேண்டும்’’ என்றும், சசிதரூர் யோசனை தெரிவித்து இருக்கிறார்.தற்போதைய சட்டத்தின்படி, கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பெயர் விவரங்களை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த நிலையில் இணைய தளத்தில் டெல்லி மாணவி விவகாரம் குறித்து சசிதரூர் வெளியிட்டு இருக்கும் கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வரவேற்பு–எதிர்ப்பு

மந்திரியின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணைய தளத்தில் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். சசிதரூரின் யோசனையை வரவேற்று சிலர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.எதிர்ப்பு தெரிவித்துள்ள சிலர், ‘‘குற்றவியல் நீதித்துறையில் உண்மையான மாற்றங்களை கொண்டுவருவதை விடுத்து, அந்த மாணவியை கவுரவப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறீர்கள்?’’ என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

கிரண்பெடி ஆதரவு

சசிதரூரின் யோசனையை வரவேற்றுள்ள அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த கிரண்பெடி, புதிய சட்டத்திற்கு மாணவியின் உண்மையான பெயர் அல்லது மக்கள் அவரை குறிப்பிடும் ‘நிர்பயா’ என்ற புனை பெயரை சூட்ட வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார். இதன் மூலம் வருங்காலத்தில் இதுபோன்ற களங்கத்தை நீக்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் கூறி இருக்கிறார்.

as

thedipaar thanks

No comments:

Post a Comment