அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 4 February 2013

ஈராக்கில் 160 பேரை கொன்ற முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் சுட்டுக்கொலை!



on 04 February 2013.
அமெரிக்க முன்னாள் கடற்படை ராணுவ வீரர் கிறிஸ்கெய்ல் (38). ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின் அங்கு அரசியல் கலவரம் நடந்தது. அதை கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ (பன்னாட்டு) படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்களில் முக்கிய ராணுவ வீரராக கெய்ல் திகழ்ந்தார். கடந்த 1999 முதல் 2009-ம் ஆண்டு வரை ஈராக்கில் அமெரிக்க வீரர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல்களை வெற்றிகராக முறியடித்தார். அப்போது சிறிய ரக லாஞ்சர் மூலம் 160-க்கும் மேற்பட்டவர்களை கொன்றார். ஈராக்கில் இருந்து அமெரிக்கா திரும்பிய இவர் டெக்சாசில் தங்கியிருந்தார்.

 

அமெரிக்கன் ஸ்னிப்பர் என்ற புத்தகத்தை எழுதினார். இதில் ஈராக்கில் ஏற்பட்ட தனது போர் அனுபவங்கள் குறித்து விளக்கியுள்ளார். இதனால் அங்கு இப்புத்தகம் அமோகமாக விற்பனையானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் டெக்சாஸ் மாகாணத்தில் கிளவுன் ரோஸ் பகுதியில் உள்ள  துப்பாக்கி சுடும் மையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.


இந்த துப்பாக்கி சூட்டில் இவருடன் சாட்லிட்டில் பீல்டு (35) என்பவரும் உயிரிழந்தார். இவரை உடன் இருந்த மற்றொரு அமெரிக்க கடற்படை வீரர் எட்டி ராய்ரூக் என்பவர் சுட்டுக் கொன்றதாக அறிவிக்கப்பட்டது. மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. இவர் டெக்சாஸ் நெடுஞ்சாலை துறை ரோந்து போலீசாரால் கைது செய்யபட்டார்.

News : Source

/eutamilar thanks

No comments:

Post a Comment