
ஹைதராபாத்:ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த
குண்டுவெடிப்பு சம்பவத்தில் ‘ஹிந்துத்துவா’ தீவிரவாத அமைப்புகளுக்கும்
தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏனென்றால் கடந்த 2007-ம் ஆண்டு மே 18-ந் தேதியன்று
ஹைதராபாத்தின் வரலாற்று சிறப்புமிக்க மெக்கா மஸ்ஜித் மசூதியில் குண்டு வெடிப்பு
நிகழ்ந்தது. இதில் 9 பேர் பலியாகினர். பின்னர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை
கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்
மொத்தம் 5 பேர் பலியாகினர். தற்போது உளவுத்துறையினரும், ஊடகத்துறையினரும் கூறியது
போலவே முதலில் ஹூஜி, இந்தியன் முஜாஹிதீன் போன்ற முகவரி இல்லாத தீவிரவாத இயக்கம்
மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 முஸ்லிம் இளைஞர்கள் கைது
செய்யப்பட்டனர். ஆனால் இக்குண்டுவெடிப்பு குறித்த தீவிர விசாரணையில் குண்டுவெடிப்பை
நிகழ்த்தியது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என கண்டுபிடிக்கப்பட்டதால் இவர்கள்
அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பின்னர் தேசியப் புலனாய்வு ஏஜன்சி (NIA)
ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தினர் 6 பேரை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது
செய்தது.
தற்போதும் ஹூஜி, இந்திய முஜாஹிதீன்கள் என்ற
கோணத்தில் விசாரணை செல்கிறது. இருப்பினும் இந்த சம்பவத்தில் இந்து தீவிரவாத
அமைப்புகளுக்கான தொடர்பு பற்றியுமான கோணமும் விசாரணைக்கு
உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

.thoothuonline thanks
No comments:
Post a Comment