அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 27 February 2013

பெண்களை கற்பழித்து கொன்று நரமாமிசம் தின்ற பொலிஸ் - திடுக்கிடும் தகவல்


பெண்களை கற்பழித்து கொன்று நரமாமிசம் தின்ற பொலிஸ் - திடுக்கிடும் தகவல்
February 27, 2013  02:39 pm
அமெரிக்காவில் பெண் களை கற்பழித்து கொன்று அவர்களின் நரமாமிசத்தை போலீஸ் அதிகாரி தின்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.



 அமெரிக்காவில் நியூயார்க்கை சேர்ந்தவர் கில்பெர்டோ வல்லே (32). போலீஸ் அதிகாரி ஆக பணிபுரிந்தார். அவர் பெண்களை கடத்தி கற்பழித்து அவர்களை கொலை செய்தார். பின்னர் அவர்களின் மாமிசத்தை சமைத்து சாப்பிட்டார்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி கில்பெர்டோ கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இவர் மீது மான்காட்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் கில்பெர்டோவின் முன்னாள் மனைவி காத்லீன் மேன்கான் வல்லே (27) நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது தான் அவரது கம்ப்யூட்டரை சோதனையிட்டபோது, அதில் அவர் கொலை செய்த பெண்களின் நிர்வாண போட்டோக்கள் இருந்ததாக தெரிவித்தார். ஒரு காலகட்டத்தில் தானும் அதுபோன்ற செக்ஸ் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை முயற்சியில் இருந்து அவரிடம் தப்பித்ததாக கூறினார்.

அப்போது பயத்தின் மிகுதியில் தேம்பி அழுதார். அவரை நீதிபதி சமாதானப்படுத்தினார். அவரது சாட்சியம் இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு எதிராக கடும் ஆதாரமாக உள்ளது என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

thamilan. thanks

No comments:

Post a Comment