February
27, 2013 02:39 pm
அமெரிக்காவில் பெண் களை கற்பழித்து கொன்று அவர்களின்
நரமாமிசத்தை போலீஸ் அதிகாரி தின்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நியூயார்க்கை சேர்ந்தவர் கில்பெர்டோ வல்லே (32). போலீஸ் அதிகாரி
ஆக பணிபுரிந்தார். அவர் பெண்களை கடத்தி கற்பழித்து அவர்களை கொலை செய்தார். பின்னர் அவர்களின் மாமிசத்தை சமைத்து சாப்பிட்டார்.
இது
தொடர்பாக போலீஸ் அதிகாரி கில்பெர்டோ கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இவர்
மீது மான்காட்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில்
கில்பெர்டோவின் முன்னாள் மனைவி காத்லீன் மேன்கான் வல்லே (27) நேரில்
ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது
தான் அவரது கம்ப்யூட்டரை சோதனையிட்டபோது, அதில்
அவர் கொலை செய்த பெண்களின் நிர்வாண போட்டோக்கள் இருந்ததாக தெரிவித்தார். ஒரு காலகட்டத்தில் தானும் அதுபோன்ற செக்ஸ் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை முயற்சியில் இருந்து அவரிடம் தப்பித்ததாக
கூறினார்.
அப்போது
பயத்தின் மிகுதியில் தேம்பி அழுதார். அவரை நீதிபதி சமாதானப்படுத்தினார். அவரது சாட்சியம் இந்த வழக்கில் போலீஸ்
அதிகாரிக்கு எதிராக கடும்
ஆதாரமாக உள்ளது என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
thamilan. thanks
No comments:
Post a Comment