அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 24 February 2013

ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா சென்னையில் உயிரிழப்பு!



on 24 February 2013.
சென்னையில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட வித்யா இன்று அதிகாலையில் மரணமடைந்தார். திருமணம் செய்ய மறுத்த வித்யா மீது கடந்த ஜனவரி 30ல் விஜயபாஸ்கர் என்பவர் ஆசிட் வீசினார்.இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலையி்ல் சிகிச்சை பலனளிக்காததால் வித்யா மரணமடைந்தார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அமில வீச்சினால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாணவி விநோதினி கடந்த 12-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அதே போன்று அமிலவீச்சினால் வித்யா உயிரிழந்‌துள்ளார். இதன் மூலம் அமில வீ்ச்சில் பலியானவர்களின் எண்ணி்‌க்கை 2 ஆக அதி்கரித்துள்ளது. விஜயபாஸ்கர் தற்போது சிறையில் உள்ளார்.


வினோதினி: காதலிக்க மறுத்ததற்காக முகத்தில் ஆசிட் வீசப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வரும் வினோதினி என்ற இளம் பெண், மருத்துவ செலவிற்கு கூட பணமின்றி கஷ்டப்பட்டார். சென்னையில் சாப்ட்வேட் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தவர் காரைக்காலைச் சேர்ந்த வினோதினி (23). இவர் மீது ஒருதலையாக காதல் வயப்பட்ட இவரதுநண்பர் சுரேஷ் (24) என்பவர், தனது காதலை மறுத்த ஆத்திரத்தில், கடந்த நவம்பர் 14ம் தேதி, வினோதினி முகத்தில் ஆசிட் வீசினார்.


இதில் முகம், கழுத்து, கைகள் மற்றும் மார்பு பகுதி முழுவதும் கருகிய நிலையில், பார்வையை முற்றிலுமாக இழந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்‌‌தார். வினோதினி. பார்வை முற்றிலும் பறிபோன நிலையிலும், கண்ணில் அவருக்கு பல கட்ட பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன்கள் செய்யப்பட்டன.


அவரது கால் பகுதியிலிருந்து தசை எடுக்கப்பட்டு, கண்ணில் பொருத்தப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்.12 ஆம் தேதி மரணமடைந்தார். தற்போது வித்யாவும் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. 


news  eutamilar thanks

No comments:

Post a Comment