அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 21 February 2013

உச்சிப்புளியில் ரெயில்வே கேட் மீது வேன் மோதியது


ராமநாதபுரம், பிப்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில், ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட் மீது கடந்த வாரம் வேகமாக வந்த வேன் மோதியது. இதில் அங்கு நின்ற ஒருவரும் பலியானார்.


இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு இந்த கேட் சேது எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக மூடப்பட்டது. ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் சேது எக்ஸ்பிரஸ் உச்சிப்புளி கேட்டை கடந்ததும் கேட் கீப்பர் கேட்டை திறக்க முற்பட்டார்.

அப்போது நெடுஞ்சாலையில் வேகமாக வந்த சரக்கு வேன், கேட் முழுமையாக திறப்பதற்குள் வந்து மோதியது. இதில் கேட்டில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து ராமேசுவரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு, உச்சிப்புளி ரெயில் நிலைய அதிகாரி தகவல் கொடுத்தார்.

இதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் விசாரணை நடத்தி வேன் டிரைவர் பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

news  maalaimalar thanks

No comments:

Post a Comment