விசாரணை கைதியை, பாலியல்
பலாத்காரம் செய்த மூன்று போலீசாரும், உடந்தையாக இருந்த இரு பெண் போலீசாரும்,
"சஸ்பெண்ட்' செய்யபட்டனர்.
கர்நாடகா மாநிலம்,
சிக்மகளுர் மாவட்டம், அடூர் போலீஸ் ஸ்டேஷனில், பணியாற்றி வந்தவர்கள்,
சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், உதவி சப் - இன்ஸ்பெக்டர் நந்திதா ஷெட்டி,
கான்ஸ்டபிள்கள் குருராஜ், மகேஷ், கிருத்திகா.
கடந்த, 2011
பிப்ரவரி, 11 ம் தேதி செயின் பறிப்பு குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரை, இவர்கள்
கைது செய்தனர். பெண்ணிடம் விசாரணை நடத்திய அவர்கள், பெங்களூவில் நடந்த திருட்டு
வழக்கிலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, பெங்களூருவுக்கு அழைத்து வந்து,
லாட்ஜ் ஒன்றில் தங்க வைத்தனர். அப்போது, அந்தப் பெண்ணை, சப்-இன்ஸ்பெக்டர்
சிவகுமார், கான்ஸ்டபிள்கள் குருராஜ், மகேஷ் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக
கூறப்படுகிறது. இதற்கு, பெண் உதவி சப்-இன்ஸ்பெக்டர் நந்திதா ஷெட்டி, கான்ஸ்டபிள்
கிருத்திகா ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
மீண்டும், அடூர்
போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்ட, அந்தப் பெண் விசாரணை கைதி, தனக்கு
நிகழ்ந்த கொடுமை குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் தலை மறைவாகி விட்டனர். இவர்கள்
மீது விசாரணை நடத்திய போலீசார், பல மாதங்களுக்கு பின், ஐந்து பேரையும் கைது
செய்தனர். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான விசாரணை, கோர்ட்டில் நடந்து வருவதாக போலீஸ் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
news thedipaar thanks
|
No comments:
Post a Comment