தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் டூ தேர்வுகள் ஆரம்பம்
[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013,
தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் டூ தேர்வுகள் தொடங்கிய நிலையில் மொத்தம் 8 லட்சத்து
56 ஆயிரம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 5 ஆயிரத்து 769 பள்ளிகளைச் சேர்ந்த 8
லட்சத்து 4 ஆயிரத்து 534 பேரும், தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 788 பேரும் இந்தத்
தேர்வினை எழுதுகின்றனர்.இதற்காக 2 ஆயிரத்து 20 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
5 ஆயிரம் பறக்கும் படைகள்: தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை
கண்காணிக்கும் பொருட்டு 5 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு உதவியாக இருக்கும் பள்ளிகள் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 15 நிமிடங்கள்: மாணவர்கள் கேள்வித் தாள்களை படித்துப்
பார்ப்பதற்காக கடந்த ஆண்டு கூடுதலாக 15 நிமிடங்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. அதே
முறை இந்த ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் 5 மண்டலங்களில் சிபிஎஸ்இ cbse (Central Board of Secondary
Education)பத்தாம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கான பொதுத்தேர்வும்
தொடங்கியது.
நாடு முழுவதும் 5 மண்டலங்களில் சிபிஎஸ்இ cbse (Central Board of Secondary
Education)பத்தாம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கான பொதுத்தேர்வும்
தொடங்கியது.
No comments:
Post a Comment