Tuesday, 26 March 2013 11:28

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒரு பெண் பலியாகியுள்ளார்.
கிழக்கு டெல்லியில் உள்ள கார்கர்டூமா மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள மின்படிக்கட்டில் அவர் சென்று கொண்டிருந்த போதே மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விசாரணையின் போது பெண்ணின் கணவரே அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது. டெல்லியில் நேற்று சமாஜ் கட்சி பிரமுகர் தீபக் பரத்வாஜ் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட மிக செல்வந்த வேட்பாளர் இவர் என தெரிவிக்கப்படுகிறது. ரியல் எஸ்டேட், கல்விக்கூடங்கள் என பல இவர் பெயரில் இருக்கின்றன.
4tamilmedia. thanks
No comments:
Post a Comment