சென்னை - அகமதாபாத் இடையே செல்லும்
நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் ஐதரபாத் செல்வதற்காக நேற்று ஒரு பெண் சென்னை
சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
சாதாரண பயணிகளுக்கான டிக்கெட்டை
வாங்கிய அவர், ரெயிலில் ஏறிய பின்னர் தனது டிக்கெட்டை படுக்கை வசதியுடன் கூடிய
முன்பதிவு டிக்கெட்டாக மாற்றி தரும்படி ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகர் ஜெய
கோபியிடம் கூறினார்.
ரெயில் நெல்லூரை நெருங்கிய போது,
டிக்கெட்டை மாற்றி தருவதாக அந்த பெண்ணை ஏ.சி. பெட்டிக்கு அழைத்துச் சென்ற
பரிசோதகர், அவரிடம் தகாதமுறையில் நடந்துக் கொண்டார்.
அவரது பிடியில் இருந்து
தப்பிப்பதற்காக அந்த பெண் கூச்சலிடவே, இதர பயணிகள் ஓடிவந்து அவரை
மீட்டனர்.
கூடூர் ரெயில் நிலையம் வந்ததும்,
போதையில் இருந்த ஜெய கோபியை பொதுமக்கள் துணையுடன் போலீசாரிடம் ஒப்படைத்த அந்த பெண்,
நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
இந்த புகாரையடுத்து அவர் கைது
செய்யப்பட்டார். அவரை சஸ்பெண்ட் செய்து ரெயில்வே அதிகாரிகள்
உத்தரவிட்டுள்ளனர்.
nakkheeran. thanks
No comments:
Post a Comment