புதுடெல்லி:பாகிஸ்தானில் இருந்து கஷ்மீர் அரசிடம்
சரணடைய வந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் லியாகத் ஷாவை டெல்லியை தகர்க்க வந்த
பயங்கரவாதி என்று டெல்லி ஸ்பெஷல் போலீஸ் நடத்திய நாடகம் வெட்ட வெளிச்சமானதால்
உருவான சர்ச்சை மீர் அஷ்ரஃபிற்கு உதவியுள்ளது.
லியாகத் ஷாவுடன் மீர் அஷ்ரஃபின் குடும்பமும் சரணடைவதற்காக நேபாளம் வழியாக
இந்தியா வந்துள்ளனர். நேபாள எல்லையில் வைத்து லியாகத்தைப் போலவே துணை ராணுவப்
படையான சஸஸ்திரா ஸீமாபாலிடம்(எஸ்.எஸ்.பி) மீர் அஷ்ரஃபும் சரணடைந்துள்ளார்.
லியாகத்துடன் மீர் அஷ்ரஃப் என்ற நபரையும் டெல்லி ஸ்பெஷல் போலீஸ் தீவிரவாதி என்று கைது செய்துள்ள தகவல் வெளியானதை தொடர்ந்து 3 தினங்கள் கழித்து கஷ்மீர் போலீஸின் கீழ் இயங்கும் கவுண்டர் இண்டலிஜன்ஸ் கஷ்மீரின் முன்னால் அஷ்ரஃபும் குடும்பத்தினரும் சரணடைந்துள்ளனர். மீர் அஷ்ரஃபுடன் மனைவி ஃபவுஸியாவும், ஐந்து மக்களும் வந்துள்ளனர். மீர் அஷ்ரஃபும் குடும்பத்தினரும் தங்களுடன் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வரை வந்ததாக லியாகத்தின் மனைவி அக்தருன்னிஸா கூறியிருந்தார்.
ஆனால், இவர்களுக்கு என்ன ஆயிற்று? என்ற தகவல் வெளியாகவில்லை. லியாகத்தைப் போலவே டெல்லி ஸ்பெஷல் போலீஸ் மீர் அஷ்ரஃபையும் கைதுச் செய்திருக்கலாம் என்றுசந்தேகிக்கப்பட்டது. லியாகத்தை கைது செய்த டெல்லி போலீஸ், ஜும்ஆ மஸ்ஜிதுக்கு அருகில் வெடிப்பொருட்களை கைப்பற்றியதாகவும், லியாகத்தின் உதவியாளர்தாம் இவற்றை இங்கு கொண்டுவந்தார் என்றும் கூறியது. அவரை விரைவில் கைது செய்வோம் என்றும் தெரிவித்தது. ஆனால், லியாகத்தின் கைது சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து மீர் அஷ்ரஃபை போலீஸ் விடுவித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
thoothuonline thanks
No comments:
Post a Comment