வருடம் தோறும் மே மாதம் தொடங்கும் கத்திரி வெயில்போல், இந்த வருடம் மார்ச் மாத கடையில் கடும் வெயில் தொடங்கிவிட்டது. இதனால் சென்னை மக்கள் வெளியில் செல்லவே மிகவும் தயங்குகின்றனர்.
வெயிலின் தாக்கத்தை குறைக்க
இளநீர்களையும், தர்பூசனிகளையும் கண்டால் சென்னை நகர மக்கள் வண்டியை
ஓரங்கட்டிவிடுகின்றனர்.
சனிக்கிழமை காலை சென்னை லயோலா
கல்லூரி அருகே குடும்பத்துடன் சென்ற ஒருவர், இளநீர் கடையை கண்டதும் டூவீலரை
ஓரங்கட்டி குடும்பத்துடன் இளநீர் பருகினார்.
இதேபோல், நுங்கம்பாக்கத்தில் தாகத்தை தணிக்கும் தர்பூசனி கடையை தேடி மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அந்த சாலை முழுக்க தர்பூசணிகள் விதவிதமாக அறுத்து வைக்கப்பட்டிருப்பதால், சாலைகளில் செல்வோரை கவர்ந்து இழுக்கிறது.
வள்ளுவர்கோட்டம் அருகில் நடைபாதையில் கம்மங்கூழ் விற்பனை செய்து வரும் பெண்ணிடம், அடிக்கும் வெயிலுக்கு மோர் கலந்து கூழ் குடும்மா என்று கேட்டு குடிக்கிறார் ஆட்டோ டிரைவர்.
பிரிட்ஜ் போன்ற எவ்வளவோ எலக்ரானிக் சாதனங்கள் வந்தாலும், குளிர்பானங்கள் போன்றவைகளை அருந்தினாலும், மண்பாணையில் உள்ள நீரை பருகினால் அதன் சுவையே தனிதான். இதனை அனுபவித்து மண்பாணையை வாங்க விலைபேசுகிறார்கள் பெரியார் சாலையில்.
படங்கள்: அசோக்
nakkheeran thanks
No comments:
Post a Comment