அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 27 April 2013

வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் காதலியை கண்ட காதலன் தற்கொலை!


on 27 April 2013.

தன்னைக் காதலித்த பல்கலைக்கழக மாணவி வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் காரில் ஊருக்கு வந்து இறங்கியதைத் தாங்கமுடியாத யாழ் . பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருபாலை கிழக்கில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

நீண்ட காலமாக காதலித்த தனது காதலி இந்தியாவுக்கு வழிபாட்டு ஸ்தலத்திற்கு குடும்பத்துடன் சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார். இந்தப் பெண் ஊருக்கு வரும் போது திருமணம் முடித்து புது மாப்பிள்ளையுடன் காரில் செல்வதைக் கண்டதினால் இவர் உயிரை மாய்த்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.


யாழ். பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பிரிவில் 3 ஆம் வருடத்தில் கல்வி பயின்று வந்த 23 வயதுடைய ஞானேந்திரன் பிரசாத் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

eutamilar thanks

No comments:

Post a Comment