ஜப்பானில் கடலுக்கடியில் கடும் நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி
[ செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2013,
ஜப்பானின் மியாகோ
பகுதியிலிருந்து கிழக்கே 107 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கடலுக்கடியில் நேற்று
திடீரென்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்திய நேரப்படி இரவு 12 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்
6 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் ஜப்பான் வானிலை ஆராய்ச்சி
மையம் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வழங்கவில்லை.
மேலும் நிலநடுக்கத்தால் உயிர் இழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை
தகவல்கள் வெளியாகவில்லை.
No comments:
Post a Comment