அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 2 April 2013

பெட்ரோல் பங்க் மீது தற்கொலை படையினர் தாக்குதல்: பத்து பேர் பலி

[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில், வெடிப்பொருட்களை ஏற்றி கொண்டு டேங்கர் லாரியில் வந்த தீவிரவாதிகள் ஒரு பெட்ரோல் பங்கிற்கு அருகில் அந்த லாரியை வெடிக்க வைத்தனர். டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் பெட்ரோல் பங்க் பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது. இதில் 2 கட்டிடங்கள் சேதமடைந்தன.
இந்த தற்கொலைப் படை தாக்குதலில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர்களில் 7 பேரும், காயமடைந்தவர்களில் பலரும் பொலிஸ்காரர்கள் என்று தெரியவந்துள்ளது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், அங்குள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் இறக்குவதற்காக அடிக்கடி டேங்கர் லாரிகள் வருவது வாடிக்கை என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதுவரை இந்த தாக்குதல் குறித்து எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

newsonews thanks

No comments:

Post a Comment