அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 18 April 2013

இன்று டில்லியில் பள்ளி மாணவி காரில் வைத்து பாலியல் பலாத்காரம்!


Thursday 18 April 2013

டில்லியில் இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவி காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளார் என்ற செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூறப்படுகிறது. பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை தமக்கு தெரியும் என பள்ளி மாணவி கூறியுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாணவி போலீஸில் புகார் கொடுத்தபோது, இரண்டு பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தனர் என்றும் மூன்றாவது நபர் வெளியில் நின்று கொண்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார். அதன்பின் மாணவியை தெற்கு டில்லியின் சரோஜனி நகரில் உள்ள சாலையில் தூக்கி வீசப்பட்டு அவர்கள் சென்று விட்டனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது மாணவி மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
டில்லியில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை அடுத்து பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுக்கும் விதமாக புதிய சட்டம் இயற்றப்பட்டது. மேலும், அரசியல் தலைவர்கள் அனைவரும் டில்லியில் போலீஸ் ரோந்து அதிகரிக்கப்படும் என்று கூறினர்.
இந்நிலையில் மீண்டும் அது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. viruvirupu thanks

No comments:

Post a Comment