அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 25 April 2013

மலேசியாவில் தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை : தவறுதலாக நடந்ததா?


மலேசியாவில் தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை :  தவறுதலாக நடந்ததா?

April 25, 2013  02:24 pm

மலேசியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தோடு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக்கொல்லபட்டுள்ளார்.

சம்பவத்தில் பலியானவர் ஏ.சிவா (வயது 36), என்ற டாக்சி டிரைவர். இவர் தனது மனைவி,8 வயது மகளுடன் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 2 முகமூடி ஆசாமிகள் சிவாவை சரமாரியாக சுட்டு கொன்று விட்டு தப்பிசென்றுள்ளதாக தெரிகிறது.

மற்றொரு நபரை சுட்டுக்கொல்லும் முயற்சியில் சிவா தவறுதலாக பலியாகி இருக்கக்கூடும் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விசாரணையில், சிவா மர்ம நபர்களால் 4 முறை சுடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

thamilan thanks

No comments:

Post a Comment