மே 28, 2013 at 4:32:12 PM
வறட்சி மற்றும் உற்பத்திக் குறைவு காரணமாக வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. வறட்சி காரணமாக வெங்காய மண்டிக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இரு போகம் பயிர் செய்யப்பட்ட வெங்காயம், தற்போது கூலி ஆட்கள் இல்லாததால் ஒரு போகம் மட்டுமே பயிர் செய்யப்பட்டுள்ளதாலேயே வரத்து குறைந்துள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனால், இன்னும் சில நாட்களுக்கு விலையேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஒரு கிலோ வெங்காயம் மொத்த விற்பனையில் 75 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 90 ரூபாய்க்கும் அதிகமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
http://puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment