பதிவு செய்த நாள் -
மே 28, 2013 at 4:00:40 PM
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளி விடுமுறை நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் 3ம் தேதிக்குப் பதில் ஜூன் 10-ந்தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், புதுச்சேரியில் பள்ளிக்கூடங்கள் 10ம் தேதி திறக்கப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment