[ஞாயிறு - 26 மே-2013 - 01:10:27 மாலை ] | |
உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் ஜே.எஸ்.கேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான மனு ஒன்றை விசாரித்தது.அருணாசலப் பிரதேசத்தில் 22 வயது பெண்னை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2000-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. ஆனால் இதனை கவுகாத்தி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை குற்றவாளி அனுபவித்து வந்தார்.
இந்நிலையில் 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டதால்,தன்னை விடுவிக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த பெஞ்ச்,ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிப்பதே ஆயுள் தண்டனையாகும். நாட்டின் ஜனாதிபதியும், ஆளுநரும் மட்டுமே குற்றவாளியை மன்னித்து விடுதலை செய்ய முடியும் எனறு தெரிவித்தது.
உயர் நீதிமன்றத்தால் தண்டனை குறைப்பு செய்த குற்றவாளிக்கு, குற்றத்தின் தன்மையை தீவிரமாக ஆராய்ந்து மன்னிப்பு அளிக்கும் உரிமை அம்மாநில அரசுக்கு உள்ளது என்றும் தெரிவித்தது.
| |
காணொளி செய்திகள் tamilantelevision. thanks |
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Sunday 26 May 2013
ஆயுள் தண்டனை கைதிகள் 14 வருடங்கள் கழித்து விடுவிக்க கோர முடியாது: உச்ச நீதிமன்றம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment