மியான்மரில் முஸ்லீம்களின் பலதார திருமணத்துக்கு தடை
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 05:36.28 மு.ப GMT ]
மியான்மரில் மேற்கு பகுதியில் வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள ராக்கின் மாகாணத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வாழ்கின்றனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இங்கு முஸ்லீம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே பயங்கர கலவரம் வெடித்தது.
அப்போது, முஸ்லீம்களின் ஆயிரக்கணக்கான வீடுகளை புத்தமதத்தினர் தீ வைத்து கொளுத்தினர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன் 1 லட்சத்து 25 ஆயிரம் முஸ்லீம்கள் வீடுகளை இழந்தனர்.
கலவரம் குறித்து விசாரணை நடத்த அரசு ஒரு குழுவை அமைத்தது. அக்குழு நடத்திய விசாரணையில் முஸ்லீம்களின் மக்கள் தொகை பெருக்கமே மதக்கலவரம் ஏற்பட காரணம் என்று தெரிய வந்தது.
மேலும் இந்த மாகாணத்தில், புத்தமதத்தினரைவிட முஸ்லீம்களின் மக்கள் தொகை 10 மடங்கு அதிகம் இருப்பதால் தான் இந்த கலவரம் உருவானது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, மியான்மரில் முஸ்லீம்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி மியான்மரில் ராகின் மாகாண முஸ்லீம்கள் குடும்பத்திற்க்கு தலா 2 குழந்தைகள் மட்டுமே பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முஸ்லீம்களின் பலதார திருமணத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ராகின் மாகாண செய்தி தொடர்பாளர் வின்மியாங் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment