உலகில் வாழும் மனிதர்களிடையே எத்தனையோ விதமான நோய்கள் தாக்கி அவர்களை விசித்திரப்பிறவிகளாக உலகம் காட்டிக்கொண்டிருக்கிறது. நீங்கள் இன்று பார்க்கப்போகும் பெண். இவர் சீனாவைச்சேர்ந்த லீ ஹோங்பாங் என்பவர். இவரது இன்றைய தோற்றம் எம்மை மட்டும் அல்ல அவரையே ஆச்சரியத்துக்கு உள்ளாக்குகின்றது. காரணம் குறித்த பெண்ணின் முகம் பூதங்களின் முகங்களை போன்று அகோர வடிவில் இருப்பதே ஆகும். இந்த நிலைக்கு காரணம் நோய்.
ஆரம்பத்தில் அதாவது 2001 ம் ஆண்டு காலப்பகுதியில் லீ மற்றைய பெண்களை போன்று ஒரு சாதாரண அழகிதான் . ஆனால் இன்று அவரது அழகு பறிபோனது பரிதாபம். 2001 களில் இவருக்கு நெற்றியில் ஒரு சிறிய கட்டி வளரத்தொடங்கியுள்ளது. எனினும் பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக வளரத்தொடங்கியதும் அறுவைச்சிகிச்சை செய்து அகற்றியுள்ளார்கள். ஆனால்…அந்த நிலமை நீண்ட காலம் நிலைக்கவில்லை . மீண்டும் 2005 இல் முகம் பூராகவும் கட்டிகள் சதைகள் வளரத்தொடங்கியுள்ளது. எனினும் இதனை நீக்க அறுவைச்சிகிச்சை செய்யவேண்டும் என டாக்டர் குறிப்பிட்டார்கள்: ஆனால் ஏழைக்குடும்பத்தை சேர்ந்த அவருக்கு டாக்டர்கள் கேட்ட தொகை அதிர்ச்சியை கொடுத்தது. எனினும் எனினும் இதற்கான பணத்திaனை சேமிக்க கடுமையாக உழைத்து வருவதாக குறிப்பிட்டார்
இவர் திருமணம் முடித்து பிள்ளைகளும் உள்ளார்கள். இவர் வாழும் கிராமத்தினர் இவரை ஒரு கெட்ட சகுனமாகவே பார்த்தார்கள் . எனினும் இவர் இதனை பொருட்படுத்துவதில்லை காரணம் தனது கணவர் உட்பட குழந்தைகள் தன்னிடம் பாசமாக இருப்பதாக குறிபஇபிடுகிறார். மேலும் தனது மாமியார் தன்னை மகள் போல கவனித்து வருவதாகவும் அப்போது குறிப்பிட்ட லீ தனது கடின உழைப்பால் இன்று சாதாரண வடிவம் பெற்றுள்ளார். இவரது முயற்சி கடந்த வருடம் நிறைவேறியது. இவரது முக அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இதன் பின்னரான இவரது முகத்தினை கீழ் உள்ள படத்தில் காணலாம்.
No comments:
Post a Comment