[ஞாயிறு - 12 மே-2013 - | |
|
|
தமிழகத்தில் வெப்ப
சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழைப்பெய்யலாம் என்றும் வங்க கடலில்
உருவான புயல் திசை மாறியதால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை என்றும்
வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு தெற்கே, தென்மேற்கு வங்க கடலில் 3 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது தீவிரம் அடைந்து காற்றழுத்த மண்டலமாக மாறியது. தொடர்ந்து அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. இந்த புயலுக்கு மகாசேன் என பெயரிடப்பட்டது. இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தால் தமிழ் நாட்டில் நல்ல மழை பெய்யும் வாய்ப்பு இருந்தது. ஆனால்; புயல் திசை மாறியதால் தமிழ்நாட்டுக்கு மழை வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அடுத்த 34 மணி நேரத்தில் வடக்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புயல் வங்காள தேசம், மியான்மர் நோக்கி திசை மாறியது. இதனால் தமிழகத்தில் மழை வாய்ப்பு இல்லை என்றும் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | |
காணொளி செய்திகள் tamilantelevision thanks |
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Sunday, 12 May 2013
வங்காளம் மியான்மர் நோக்கி புயல் திசை மாறியது, வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யலாம்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment