அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 1 May 2013

வயதான தாயை பாதுகாக்க சிசிடிவி கேமரா


வயதான தாயை பாதுகாக்க சிசிடிவி கேமரா

May 2, 2013  09:39 am

தனது மகனும் மருமகளும் தன்னை மோசமாக நடத்துவதாக வயோதிப தாயொருவர் செய்திருந்த முறைப்பாட்டை விசாரித்த இந்திய நீதிமன்றமொன்று வீட்டுக்குள் நடப்பவற்றை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறு உத்தரவிட்டுள்ளது.


மகனும் மருமகளும் நடந்துகொள்ளும் முறையைக் கண்காணிப்பதற்காக காவல்துறையினர் கமராவில் பதிவாகும் காட்சிகளை அடிக்கடி சோதிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தானில் உள்ள நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

72 வயதான விம்லா தாரிவால் என்ற அந்த விதவைத் தாய், தன்னை தனது மகன் அடிக்கடி தாக்குவதுடன் வீட்டைவிட்டு வெளியே அனுப்பவும் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் பல தலைமுறைகளாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்துவருகின்ற கூட்டுக் குடும்பங்கள் பெருமளவில் உள்ளன.

இந்தக் குடும்பங்களில் அடிக்கடி ஏற்படுகின்ற சொத்துத் தகராறுகள் போலிஸ், நீதிமன்றம் வரை செல்வது வழக்கம்.

எனினும், இவ்வாறான பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு அளிக்கப்படும் தீர்ப்புகளில் புதிய மாறுதலாக முதற்தடவையாக நீதிமன்றமொன்று சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களை பொருத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற வழக்குகளுக்கு இந்த தீர்ப்பு முன்மாதிரியாக அமைந்துவிடுமா என்பது தெரியவில்லை என்று அவதானிகள் கருதுகின்றனர்.

thamilan. thanks

No comments:

Post a Comment